சென்னை:
சென்னையில் மாண்டஸ் புயல் காரணமாக கடந்த 9-ந்தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவ்விடுமுறையை ஈடுசெய்ய நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் வெள்ளிக்கிழமை பாடத்திட்டத்தை பின்பற்றி இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரம்ப பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiX2h0dHBzOi8vd3d3Lm1hYWxhaW1hbGFyLmNvbS9uZXdzL2Rpc3RyaWN0L3RhbWlsLW5ld3MtdG9tb3Jyb3ctc2Nob29scy13b3JraW5nLWluLWNoZW5uYWktNTQ5Mjkz0gFjaHR0cHM6Ly93d3cubWFhbGFpbWFsYXIuY29tL2FtcC9uZXdzL2Rpc3RyaWN0L3RhbWlsLW5ld3MtdG9tb3Jyb3ctc2Nob29scy13b3JraW5nLWluLWNoZW5uYWktNTQ5Mjkz?oc=5