கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் அதைத் திறக்க முடியவில்லை. அதனால் அவர் நீண்டநேரமாக கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. அதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கைகளில் எலக்ட்ரீக் ஒயர்கள் சுற்றப்பட்ட நிலையில் மின்சாரம் தாக்கி முத்து குமரகுரு இறந்து கிடந்தார். அதனால் அதிர்ச்சியடைந்த அவரின் குடும்பத்தினர், அம்பத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் முத்து குமரகுருவின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
முத்துகுமரகுரு, மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அம்பத்தூர் போலீஸார் கூறுகையில், “சடலமாக மீட்கப்பட்ட முத்துகுமரகுருவின் இரண்டு கைகளிலும் மின்வயர்கள் சுற்றப்பட்டிருந்தன. அதனால் அவர் மின்சாரத்தை தன் உடலில் பாய வைத்து தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. அவரின் படுக்கையறையில் ரூபாய் நோட்டுக்கள், வங்கி பாஸ் புத்தகங்கள், டைரிகள், இரண்டு செல்போன்கள் உள்ளன. அவற்றை கைப்பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறோம்” என்றனர்.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiX2h0dHBzOi8vd3d3LnZpa2F0YW4uY29tL25ld3MvY3JpbWUvbWlsbC1tYW5hZ2VyLWNvbW1pdHMtc3VpY2lkZS1pbi1jaGVubmFpLXBvbGljZS1pbnZlc3RpZ2F0aW5n0gFpaHR0cHM6Ly93d3cudmlrYXRhbi5jb20vYW1wL3N0b3J5L25ld3MvY3JpbWUvbWlsbC1tYW5hZ2VyLWNvbW1pdHMtc3VpY2lkZS1pbi1jaGVubmFpLXBvbGljZS1pbnZlc3RpZ2F0aW5n?oc=5