சென்னை உயர் நீதிமன்றத்தில், ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு அதிகாரிகள் 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியுள்ளனர். எனவே, அந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது அப்போதைய மாவட்ட வருவாய் அதிகாரியும், தற்போது மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையருமான நர்மதா நேரில் ஆஜராகியிருந்தார். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், “கடந்த 2020-ம் ஆண்டு மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. தவறாக வழங்கப்பட்ட இழப்பீடு தொகைகள் திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. வேண்டு மென்றே போலியான நபர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. இத்திட்டத்தின் கீழ் நெம்மிலி, அயக் குளத்தூர் கிராமங்களில் கையகப்படுத் தப்பட்ட 3 லட்சத்து 64 ஆயிரத்து 982 சதுர மீட்டர் நிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட 286 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீட்டில், 247 கோடியே 46 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதனால் 38 கோடியே 93 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMifWh0dHBzOi8vdGFtaWwuaGluZHVzdGFudGltZXMuY29tL3RhbWlsbmFkdS9jaGVubmFpLWhpZ2gtY291cnQtZGlzc2F0aXNmaWVkLXdpdGgtY2JjaXQtaW52ZXN0aWdhdGlvbi1uZXh0LTEzMTY3NTI1OTM5NDk5NC5odG1s0gGBAWh0dHBzOi8vdGFtaWwuaGluZHVzdGFudGltZXMuY29tL2FtcC90YW1pbG5hZHUvY2hlbm5haS1oaWdoLWNvdXJ0LWRpc3NhdGlzZmllZC13aXRoLWNiY2l0LWludmVzdGlnYXRpb24tbmV4dC0xMzE2NzUyNTkzOTQ5OTQuaHRtbA?oc=5