உளுந்தூர்பேட்டையில் விபத்து: லாரி மீது சென்னை ஆம்னி பஸ் மோதல்; 2 பேர் பலி – தினத் தந்தி

கள்ளக்குறிச்சி, சென்னையில் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்துக்கு புறப்பட்டது. அதேபோல் சென்னையில் 52 எருமை மாடுகளை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலத்துக்கு லாரி ஒன்றும் புறப்பட்டது. இந்த 2 வாகனமும் இரவு 11.45 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை கடந்து, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றன. அப்போது ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி அப்பளம்போல் […]

Continue Reading

கோர விபத்தில் சிக்கிய சென்னை பேருந்து..இடதுபுறம் அமர்ந்திருந்த 2 பயணிகள் பலி -நள்ளிரவில் பயங்கரம்..! – தந்தி டிவி | Thanthi TV – Tamil News

பயணித்தவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம்- பேருந்து ஓட்டுநர், நடத்துனர் மாயம் விபத்து… 2 பேர் உயிரிழப்பு- லாரியில் இருந்த 4 மாடுகளும் பலியான பரிதாபம்… Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMiSWh0dHBzOi8vd3d3LnRoYW50aGl0di5jb20vc3BvdGxpZ2h0L29tbmktYnVzLWNvbGxpZGVzLXdpdGgtYS10cnVjay0xNjQ0ODnSAU1odHRwczovL3d3dy50aGFudGhpdHYuY29tL2FtcC9zcG90bGlnaHQvb21uaS1idXMtY29sbGlkZXMtd2l0aC1hLXRydWNrLTE2NDQ4OQ?oc=5

Continue Reading

சென்னை மாநகர காவல்துறையில் நிலுவை வழக்கு போதை வாகன ஓட்டிகள் 8,912 பேரிடம் அபராதம் வசூலிக்கும் பணி தீவிரம்: அபராதம் செலுத்தாத 263 பேர – தினகரன்

சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலித்து வருகின்றனர். போதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது விதிக்கப்படும் அபராதம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி சட்டத்தை ஒன்றிய அரசு கடுமையாக்கியுள்ளது. அதைதொடர்ந்து தமிழகத்திலும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது பரிசோதனைகள் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதமாக ரூ.10 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்த சட்டம் […]

Continue Reading

சென்னை மாவட்ட வாள்வீச்சு போட்டி – இன்று நடக்கிறது – தினத் தந்தி

சென்னை, மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாகுமரியில் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட சீனியர் வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான மாவட்ட வாள்வீச்சு போட்டி நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த தகவலை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்க தலைவர் எஸ்.தனசேகரன், வி.கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர். Related Tags : Source: https://news.google.com/__i/rss/rd/articles/CBMibGh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vU3BvcnRzL090aGVyU3BvcnRzL2NoZW5uYWktZGlzdHJpY3QtZmVuY2luZy1jb21wZXRpdGlvbi10by1iZS1oZWxkLXRvZGF5LTg4MzM5N9IBcGh0dHBzOi8vd3d3LmRhaWx5dGhhbnRoaS5jb20vYW1wL1Nwb3J0cy9PdGhlclNwb3J0cy9jaGVubmFpLWRpc3RyaWN0LWZlbmNpbmctY29tcGV0aXRpb24tdG8tYmUtaGVsZC10b2RheS04ODMzOTc?oc=5

Continue Reading

கடற்கரையில் கழிவுகளை அகற்றும் பணி: பொங்கல் பண்டிகையின்போது சென்னை மாநகராட்சியின் திட்டம் – Indian Express Tamil

சென்னையை குப்பையில்லா நகரமாக மாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, பொங்கல் விடுமுறையின் போது கடற்கரைகளில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஜனவரி 17 மற்றும் 18ஆகிய தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில்) மெரினா, எலியட்ஸ், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னை மாநகரில் சட்ட ஒழுங்கை பராமரிக்க, 15,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை சென்னை போலீசார் நிறுத்தியுள்ள நிலையில், கடலோர பகுதிகளில் குப்பை […]

Continue Reading

மெரினாவில் குவிந்த மக்கள்: ரோந்துப் பணியில் டிஜிபி சைலேந்திர பாபு! – தினமணி

காணும் பொங்கலையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஜனவரி 15-ஆம் தேதி முதல் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. பொங்கல் பண்டிகையின் இறுதி நிகழ்வான காணும் பொங்கலான இன்று பொது இடங்களில் மக்கள் குவிந்துள்ளனர். காணும் பொங்கலான இன்று தமிழகம் முழுவதும் பொது இடங்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர். சென்னை கடற்கரைகளில் மட்டும் சுமார் 1,200 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரைகளில் இன்று […]

Continue Reading

சே குவேரா மகள், பேத்தி சென்னை வருகை: மூத்த தலைவர்கள் வரவேற்றனர்! – தினமணி

கியூபா புரட்சியாளா் சே குவேராவின் மகள் மற்றும் பேத்தி ஆகியோா் செவ்வாய்க்கிழமை (ஜன.17) சென்னை விமான நிலையம் வந்தவர்களை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் வரவேற்றனர்.  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேராசிரியா் எஸ்டெஃபெனி குவேரா ஆகியோா் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் தமிழ்நாட்டின் சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு […]

Continue Reading

காணும் பொங்கல்: சென்னை கடற்கரைகளில் 1,200 போலீஸாா் பாதுகாப்பு – தினமணி

காணும் பொங்கலையொட்டி, சென்னையில் கடற்கரைகளில் 1,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள் என பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் தெரிவித்தாா். இது குறித்த விவரம்: பெசன்ட்நகா் எலியட்ஸ் கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரம், புதிதாக பொருத்தப்பட்ட 28 கண்காணிப்பு கேமராக்கள், மெரீனா கடற்கரையில் புதிதாக அமைக்கப்பட்ட சூரிய ஒளியில் இயங்கக் கூடிய 4 புறக்காவல் நிலையங்கள் ஆகியவற்றை சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் சனிக்கிழமை திறந்து வைத்து, சேவையைத் தொடக்கி வைத்தாா். […]

Continue Reading

தமிழ்நாடு ஆக மாறிய மெட்ராஸ் ஸ்டேட்.. போராட்டங்கள் ஒரு பார்வை! – Indian Express Tamil

கடந்த வாரம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மாநிலத்தின் பெயரை ‘தமிழகம்’ என மாற்ற பரிந்துரைத்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.இந் நிலையில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட பல அரசியல் கட்சிகள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் மெட்ராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்ற நடந்த போராட்டத்தை நினைவு கூர்ந்தன. ஜனவரி 14, 1969 அன்று, அப்போதைய முதல்வர் சிஎன் அண்ணாதுரையின் கீழ், சென்னை மாநிலம் அதிகாரப்பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாட்டின் […]

Continue Reading

ஆவினில் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை – தினகரன்

சென்னை: ஆவின் நிறுவனத்தில் எந்த நோட்டீசும் கொடுக்காமல் 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் போது லஞ்சம் பெற்று பணி ஆணை பெற்றதாக 25 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்யப்பட்டு 2 ஆண்டுகளாக பணியில் நீடிக்கும் நிலையில் முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதிமுக ஆட்சியின் போது ஆவின் நிர்வாகத்தில் பணிநியமனங்களில் விதிமுறை மீறல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த […]

Continue Reading